சோழவந்தான் அருகே விழிப்புணர்வு பேரணி

சோழவந்தான்,நவ.20: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் செல்லம்பட்டி ஒன்றியம் சார்பில் உலக கழிப்பறை தின ஊர்வலம் நடந்தது. இதில் கழிப்பறையின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கழிப்பறை தின ரதத்துடன் பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர்  வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த பேரணியில் செல்லம்பட்டி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக்குமார், ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய பணிமேற்பார்வையாளர் ஜேக்கப், ஊராட்சி செயலர் பால்பாண்டி எட்டூர் கிராம கமிட்டி தலைவர் ஜெயபால், பொருளாளர் விருமாண்டி மற்றும் சுகாதாரத் துறையினர், மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: