மதுரை, நவ. 20: உசிலம்பட்டி தாலுகாவை சேர்ந்த வடக்கம்பட்டி காலனி மக்கள், சக்கரை தலைமையில் கலெக்டர் நடராஜனிடம் நேற்று மனு அளித்தனர். அதில், “வடக்கம்பட்டி காலனியில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் ஒரு ஏக்கர் 26 சென்டில் கடந்த 1929ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். எங்களை சுற்றி நான்கு பக்கமும் ஒரு சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எங்களுக்கு பத்திரம் மட்டும் உள்ளது. அதற்கான பட்டா வேண்டுமென உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால் எங்கள் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.