விவசாயிகள் வலியுறுத்தல் மதுரையில் 4 நாட்களில் 18 பேர் மாயம்

மதுரை, நவ. 20: மதுரை மேலூர் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் சேவுகமூர்த்தி. இவரது மனைவி பாண்டிச்செல்வி(19). இவர்கள் இருவருக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாண்டிச்செல்வி, மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகமலைபுதுக்கோட்டை கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் முத்துரேசன். இவரது மகள் ஜெயாஸ்ரீ(27). வீட்டை வீட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை பொட்டபனையூரைச் சேர்ந்த சந்திரன் மகன் செந்தில்குமார்(17). கல்லூரியில் பிஏ படித்து வருகிறார். 17ம் தேதி கல்லூரிக்கு வந்தவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சிலைமான் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமங்கலம் அருகே சோழம்பட்டியைச் சேரந்தவர் அருண்குமார்(44). வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த 16ம் தேதி அன்று கருப்பாயூரணி தங்கராஜ்(40) மாயமானார். மற்றொரு சம்பவத்தில் அப்பன்திருப்பதியை சேர்ந்த மீனா தனது இரண்டு குழந்தைகளுடன் மாயமானர். இதேபோல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 18 பேர் மாயமாகி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Related Stories: