குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திண்டுக்கல், நவ. 20: திண்டுக்கல் சோலைஹால்ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் கடந்த ஆண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். தலைமறைவாக மும்பையில் வசித்து வந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது மதுரை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

* திண்டுக்கல் பாரதிபுரம் ஜேஜே.நகரைச் சேர்ந்தவ ரவுடி கணேசன் (44). இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. கடந்த மாதம் ரோந்துப்பணியில் இருந்த போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் தெற்கு போலீசார் கைது செய்து தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார்.இருவரையும் எஸ்பி.சக்திவேல் பரிந்துரையின் பேரில் கலெக்டர் வினய் குண்டர் சட்டப்பிரிவிற்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

Related Stories: