மின்சாரம் தாக்கி பெண் பலி காப்பாற்ற சென்ற கணவர் காயம்

வத்தலக்குண்டு, நவ. 20: வத்தலக்குண்டு அருகே துணியை காயபோட்ட போது அறுந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவது மனைவி அனிதா (25). நேற்று காலை துவைத்த துணியை காயவைக்க கம்பியில் போட்டார். அப்போது அக்கம்பியில் மின்வயர் அறுந்து விழுந்து இருந்ததாக தெரிகிறது. இதில் அனிதா உடலில் மின்சாரம் பாய்ந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற அழகர்சாமியும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா உயிரிழந்தார். அழகர்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விருவீடு சப்இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: