2 பேர் கைது வஉசி நினைவு நாள் அனுசரிப்பு

தஞ்சை, நவ. 20:  தஞ்சை மாவட்ட தேசிய நண்பர்கள் பேரவை சார்பில் வ.உ.சி.நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை பாம்பாட்டி தெருவில் தேசிய நண்பர்கள் பேரவை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் கோவி.மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராசு, குணசேகரன், பூக்கடை குணசேகரன், பழனிவேல், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். பேரவை புரவலர் நாஞ்சி.வரதராஜன், வஉசி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானசீலன், ஆதிநாராயணன், வாசு, சிதம்பரம், ராஜூ, வெங்கடேசன், அய்யாறு, ராகவேந்திரதாசன், தர்மசிவக்குமார், கரந்தை முருகன், மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அபுபக்கர் சித்திக் நன்றி  கூறினார்.

Related Stories: