பாபநாசம் கிளை சிறையில் நீதிபதி ஆய்வு

பாபநாசம், நவ. 20: பாபநாசம் கிளை சிறை மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாந்தி ஆய்வு செய்தார். அப்போது கிளை சிறையில் பல்வேறு கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதைொடர்ந்து சிறைவாசிகளிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறினார். மேலும் சிறைவாசிகளிடம் குடிப்பழக்கத்தை மறக்க வேண்டும். குடிப்பழக்கமே பல்வேறு வகையான குற்றச்செயல் புரியும் எண்ணத்தை ஏற்படுத்தும். சமுதாயத்தில் குற்ற செயல்கள் புரியாமல் ஒழுக்கமிக்க மனிதனாக வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது தன்னார்வ சட்ட பணியாளர்கள் தனசேகரன், ராஜேந்திரன், கிரேஷ் சுகரிகா உடனிருந்தனர்.

Related Stories: