திருவையாறு தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 கூரை வீடுகளுக்கு நிவாரணம்

திருவையாறு, நவ. 20:  திருவையாறு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 கூரை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கஜா புயலால் கூரை வீடுகள் பாதிக்கப்பட்ட 9 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ரூ.5 ஆயிரத்தை முன்னாள் எம்எல்ஏக்கள் மணத்திடல் சுப்பிரமணியன், ரத்தினசாமி, நிலவள வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜா வழங்கினர். கூட்டுறவு சங்க தலைவர்கள் நீலமேகம், பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள் தணிகாசலம், நவீன்சேகர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தலைமையிடத்து துணை தாசில்தார் அருள்மொழி செய்திருந்தனர். திருவையாறு, நவ. 20:  திருவையாறு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 கூரை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கஜா புயலால் கூரை வீடுகள் பாதிக்கப்பட்ட 9 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ரூ.5 ஆயிரத்தை முன்னாள் எம்எல்ஏக்கள் மணத்திடல் சுப்பிரமணியன், ரத்தினசாமி, நிலவள வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜா வழங்கினர். கூட்டுறவு சங்க தலைவர்கள் நீலமேகம், பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள் தணிகாசலம், நவீன்சேகர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தலைமையிடத்து துணை தாசில்தார் அருள்மொழி செய்திருந்தனர்.

Related Stories: