தஞ்சை பகுதியில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தஞ்சை, நவ. 20:  தஞ்சை கரந்தை கிருஷ்ணன் கோயில் தெருவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஐஎன்டியூசி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்  ராகவேந்திரதாசன் தலைமை வகித்தார். செயலாளர் சக்கரவர்த்தி ஆதித்யன், துணை  தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை தலைவர் கோவிந்தராஜ்,  இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பந்தல் கோவிந்தன், கருணாகரன், தருமராஜ், கமல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தஞ்சை  மிஷன்மேட்டு தெருவில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து மாலை  அணிவித்தார். மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அன்பரசன், மாவட்ட  பொருளாளர் வயலூர் ராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ்,  ராம்பிரசாத் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐஎன்டியூசி பொது  செயலாளர் மோகன்ராஜ், மாநகர காங்கிரஸ் துணைத்தலைவர் செந்தில் பழனிவேல்,  இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், வட்டார தலைவர் நாராயணசாமி,  பாலசுப்பிரமணியன், பாஸ்கரன்

 பங்கேற்றனர்.

Related Stories: