புதுச்சேரி, நவ. 20: புதுச்சேரியில் வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்து விற்பதற்கு வணிகர்கள் பதிவு செய்ய விண்ணப்பம் கோரப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கட்டுமான நோக்கத்திற்கான மணல் தட்டுப்பாடாக உள்ளது என்கிற காரணத்தால் புதுச்சேரி அரசானது வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. கட்டுமான நோக்கத்திற்கு தேவைப்படும் மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய கருதுகிற எவரும் ெசல்லத்தக்க இறக்குமதி/ வணிகர் பதிவினை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இறக்குமதி/ கனிமப் பொருள் வணிகராக பதிவு செய்ய விரும்பும் நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.