புதுச்சேரி, நவ. 20: கூட்டுறவு வார விழாவையொட்டி புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விசாரணை மற்றும் ஆய்வு என்ற தலைப்பில் கடந்த 14ம் தேதியும், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் இயக்குநர்களுக்கு தலைமைத்திறன் குறித்து 15ம் தேதியும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் முதுநிலை பணியாளர்களுக்கு எப்படி செய்வது? என்ற தலைப்பில் 16ம் தேதியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 76க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 65ம் ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் இன்று (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.