74 பன்றிகளை திருடியவர் 3 மாதங்களுக்கு பின் கைது

வேப்பூர், நவ. 20: வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் (53). இவரது, வீட்டின் பின்புறத்தில் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 24 பன்றிகளும், செப்டம்பர் மாதம் 21ம் தேதி 50 பன்றிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் வேப்பூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வேப்பூர் கூட்ரோட்டை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பன்றிகள் திருட்டு குறித்து புகார் அளித்து 3 மாதங்களுக்கு பின் குற்றவாளியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: