நைனாக்குப்பம் கிராமத்தில் கூழாங்கல் குவாரி மூடல்

உளுந்தூர்பேட்டை, நவ. 20:  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு அனுமதியின்றி கூழாங்கல் குவாரி இயங்கி வருவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு அதிரடிப்படையுடன் வந்த எஸ்பி மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசார் நைனாக்குப்பம் கிராமத்தில் கூழாங்கல் கடத்திய லாரியை மடக்கி பிடித்து இரண்டு பேரை கைது செய்தனர்.  

தொடர்ந்து பல கிராமங்களில் கூழாங்கல் குவாரி அனுமதியின்றி நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து நேற்று நைனாக்குப்பம் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கூழாங்கல் குவாரியை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் மூடினார்கள். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.

Related Stories: