மதுபாட்டில் விற்ற பெண் கைது

நெய்வேலி, நவ. 20: நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள வீணங்கேணி பகுதியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோயில் அருகே மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் தனசங்கு (36) என்பதும், இவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து இப்பகுதியில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து 96 புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: