திருக்கோவிலூர், நவ. 20: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், விழுப்புரம் இணைஇயக்குனர் சுந்தரராசு மற்றும் கள்ளக்குறிச்சி சுகாதாரபணிகள் துணைஇயக்குனர் ஜெமினி ஆகியோரின் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் அரசுமருத்துவமனை மற்றும் நகர்புற சுகாதாரநிலையம் இணைந்து திருக்கோவிலூர் அரசுமருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தடுப்புபணி மேற்கொள்ளப்பட்டது. திருக்கோவிலூர் அரசுமருத்துவமனை முழுவதும் 5சதவிகிதம் லைசால்கொண்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு கைகழுவும் முறை செய்து காண்பிக்கப்பட்டது.