தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

வேப்பூர், நவ. 20: வேப்பூரில் முன்விரோத தகராறில் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர்கள் மஞ்சமுத்து (43), காமராஜ் (55). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த காமராஜ், அவரது மனைவி அம்புலி, மகள் ஜோதி, கொத்தனூரை சேர்ந்த ரவி ஆகியோர் மஞ்சமுத்து, அவரது மனைவி செல்வராணி ஆகிய 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காமராஜ் உள்பட 4 பேர் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: