டெங்கு காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி

பெரம்பூர், நவ.20: சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராணி (60). கணவரை இழந்த இவர், தனியாக வசிக்கிறார். கடந்த வாரம் ராணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ராணிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறினார். மேலும், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படி தெரிவித்தார். இதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி பெரவள்ளூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ராணியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி, நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

Related Stories: