சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஏர்ஏசியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த இஸ்ரப் (32) என்ற வாலிபரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் பயன்படுத்திய 8 லேப்டாப்களை கொண்டு வந்தார். விமானத்தில் பயணம் செய்பவர்கள், பயன்படுத்தியதாக இருந்தாலும், ஒருவருக்கு ஒரு லேப்டாப் கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால், அவர் 8 லேப்டாப்களை கொண்டு வந்ததால், அதனை பறிமுதல் செய்தனர். ஆனாலும் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.