சென்னை, நவ.20:மலேசிய நாட்டில் தடய அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் நடராஜன் மூர்த்தி (52) தலைமையில் 15 மாணவ, மாணவிகள் நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்திற்கு சென்று காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள், துப்பாக்கி சுடும் தளம் போன்றவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு சென்று குற்றங்களை கண்டிபிடிப்பதில் தடய அறிவியலின் பங்கு எந்தளவிற்கு முக்கியமானதாக உள்ளது என்பதை பற்றி தடய அறிவியல் நிபுணர்களிடம் கேட்டறிந்தனர்.