சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பல்லாவரம்: தருமபுரி மாவட்டத்தில் சிறுமி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் பல்லாவரத்தில் நடந்தது. இதில், சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரி கேஷமிட்டனர். பின்னர், ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கண்டனத்திற்கு உரியது. இந்த கொடூர குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மாணவி சவுமியாவின் குடும்பத்திற்கு உரிய நீதியும், நிவாரணமும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் எங்களது போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்,’’ என்றனர்.

Related Stories: