முன்னீர்பள்ளத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

நெல்லை, நவ. 19: முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டி 7,9,11,13 மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்கள் என 5 பிரிவுகளாக நடந்தது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குநர் பார்த்திபன் கலந்து ெகாண்டார். முதல்நாள் போட்டியை நெல்லை செஸ் அசோஸியேசன் துணைத்தலைவர் விஜய்பிரதீப் துவக்கிவைத்தார்.

போட்டியில் பள்ளி தலைவர் அமரவேல் பாபு, தாளாளர் ஜெயந்தி, முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் நெல்லை டவுன் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளி முதல் பரிசையும் சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளி 2ம் பரிசையும் வென்றது. நெல்லை மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழக முதன்மை நடுவர் செல்வமணிகண்டன் அவரது குழுவினர் போட்டியை நடத்தினர். ஏற்பாடுகளை முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் மேலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: