எஸ்.ஐயை தாக்கிய தொழிலாளி கைது

பேட்டை, நவ. 19:  பழையபேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முருகன்(25). குடும்ப தகராறு காரணமாக முருகனும், தந்தை பாலகிருஷ்ணனும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. ஜெயராஜ், அவர்களை  சமாதானமாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த முருகன், எஸ்.ஐ.யை அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எஸ்.ஐ. ஜெயராஜ் புகாரின் பேரில் வழக்கு பதிந்த பேட்டை போலீசார் முருகனை கைது செய்தனர்.

Related Stories: