நெல்லை டவுனில் பைக்குகள் சேதம் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது

நெல்லை, நவ. 19:  நெல்லை டவுனில் முன்விரோதத்தில் ஒரே நாள் இரவில்  இருவரின் பைக்குகளை சேதப்படுத்திய சம்பவத்தில் கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை டவுன் காவல்பிறை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40), வையாபுரி நகரைச் சேர்ந்தவர் மகாராஜன் (45). இவர்கள் 2 பேரும் தங்கள் பைக்குகளை கடந்த 16ம் தேதி இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் பைக்குகளின் கண்ணாடியை உடைத்து சீட்டுகளையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இதனை காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய டவுனை சேர்ந்த மாரியப்பன் மகனும் கல்லூரி மாணவரான சதீஷ் (19), இசக்கி மகன் லோடுமேனும் உதயகுமார் (20), வேலு மகன் மணிகண்டன் (19) மற்றும் சீனிவாசன் மகன் சுப்பிரமணியன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: