நெல்லை, நவ.19: நேச்சரோபதி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மண்குளியல் சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது. கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நேச்சரோபதி (இயற்கை தின) விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். மின்வாரிய இளநிலைப்ெபாறியாளர் ஊசிகாட்டான் முன்னிலை வைகித்தார். யோகா தெரபி சிகிச்சை நிபுணர் மனோகரன் மண்குளியல் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து அதன் பயன்கள் குறித்து பேசினார். தூர்தர்சன் துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் ஆகியோர் பேசினர். உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் நன்றிகூறினார். ஏற்பாடுகளை மேலப்பாளையம் மனோ யோகா தெரபி மையம் இணைந்து செய்திருந்தது. பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முதல் இயற்கை உணவு தினவிழா கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தி இயற்கை உணவு கொள்கையை 1945ம் ஆண்டு நவ.18ம்தேதி உணவே மருந்து என்பதை கடைபிடிக்க அறிவுறுத்தினார். நோய்கள் தீரவும், வராமல் இருக்கவும் உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் முறை இயற்கை உணவு தினம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று டாக்டர்கள் சங்கர்கணேஷ், உமாஅற்புதசெல்வி ஆகியோர் தலைமையில் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.