நெல்லை, நவ.19: தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நெல்லை ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் விவேகா கலாசார கல்வி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் ெதன்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியை நடத்தியது. போட்டியை கன்னியாகுமரி மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் தாணு துவக்கி வைத்தார்.