சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தற்போது கஜா புயல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளதால் சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாநகராட்சியின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக இந்திய ஆட்சிப் பணியாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.