×

சொத்து வரி உயர்வை ரத்துசெய்ய கோரி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் போராட்டம்

தூத்துக்குடி, நவ. 16:  தூத்துக்குடியில் சொத்து வரி உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
  தூத்துக்குடியில் மாநகராட்சி சொத்து வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிய மாநராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்  மாநகரச் செயலாளர் ராஜா தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர குழு உறுப்பினர்கள் எம்எஸ் முத்து, முனியசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக சொத்துவரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும். தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தவேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Thoothukudi Marxist ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு