குளத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது 5 போலீசார் படுகாயம்

குளத்தூர், நவ. 16:    ராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய கைதியை விசாரிப்பதற்காக தூத்துக்குடி ஆயுதப்படை எஸ்ஐ ராதாகிருஷ்ணன் தலைமையில் இளையராஜ்,  அசாருதீன், பாண்டித்துரை, வசந்த் ஆகிய போலீசார் என மொத்தம் 5 பேர் போலீஸ் ஜீப்பில் குளத்தூர் அடுத்த வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலைவழியாக சென்றுகொண்டிருந்தனர். ஜீப்பை அசாருதீன்  ஓட்டினார். வேப்பலோடை ஏடிஎம் முன்புள்ள வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பல்டி அடித்தபடி அப்பகுதியிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அதில் பயணித்த 5 போலீசாரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு ஹைவே பெட்ரோல் வாகனத்தில்  ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு  விசாரணை நடத்தினர்.

Related Stories: