×

பைக் விபத்தில் தொழிலாளி சாவு

திருச்செந்தூர்,  நவ. 16:   திருச்செந்தூர் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணறு புதுக்காலனியை  சேர்ந்த தங்கராஜ் மகன் விமல்ராஜ் (33). தொழிலாளியான இவர். நேற்று முன்தினம்  வீட்டில் இருந்து பரமன்குறிச்சிக்கு பைக்கில் புறப்பட்டார். வீட்டருகேயுள்ள பெருமாள்கோயில் அருகே சென்றபோது திடீரென ஏற்பட்ட தலைச்சுற்றலால் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், நெல்லை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரவு  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி  வருகிறார்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி