கோவில்பட்டி, நவ. 16: கோவில்பட்டி கிழக்கு எஸ்ஐகள் குருசந்திரவடிவேல், அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் இலுப்பையூரணி செண்பகாநகர் பகுதி வழியாக மணல் லோடு ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் திருச்சியில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்திச்செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான சங்கரன்கோவில் அருகேயுள்ள அடைக்கலபுரத்தை சேர்ந்த காளிராஜ், கிளீனரான வீரகாளி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.