அண்ணா விளையாட்டு அரங்கில் கூட்டுறவு பணியாளர்கள் விளையாட்டு போட்டிகள்

நெல்லை,நவ.16:  கூட்டுறவு சங்க வாரவிழாவையெட்டி பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி பாளை அண்ணாவிளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 65வது கூட்டுறவு சங்க வாரவிழா 16ம் தேதி முதல் 20ம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தடகளம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, ஈட்டி, வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டிகளை மாவட்ட கூட்டுறவு சங்க இணை இயக்குநர் பிரியதர்ஷினி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வரும் 19ம் தேதி நடக்கிறது. அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த விளையாட்டு போட்டியில் கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: