10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று ெவளியீடு

நெல்லை, நவ.16:  அரசு தேர்வுகள் துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் சாய்லட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 24,362. மறுகூட்டலுக்கு  விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 203 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாட்களின் எண்ணிக்கை 1,179 ஆகும். இதில் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 4.  மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.11.2018 (இன்று) முற்பகல் வெளியிடப்படும்.

மதிப்ெபண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை. தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களைப் பதிந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 16.11.2018 முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் ெசப்டம்பர், அக்டோபர் 2018 துணைத்தேர்விற்கான பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: