மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

நெல்லை, நவ.16:  நெல்லை மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், ஓமநல்லூர், தருவை, கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பிஎஸ்என் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் போன்றவைகளை அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என மின்விநியோக ெசயற்பொறியாளர் முத்துக்குட்டி அறிவித்துள்ளார்.

Related Stories: