நெல்லையில் 18ம்தேதி இந்தி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

நெல்லை, நவ. 16:  நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு விஷாரத் இந்தி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா லட்சுமி காயத்திரி மகாலில் சான்றிதழ் வழங்கும் விழா நடக்கிறது.

இவ்விழாவிற்கு பா.ஜ.மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார். விஷாரத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அன்று காலை 9.30 மணிக்கு தங்களது இருப்பிடத்தில் அமர வேண்டும்.  இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இதனை நெல்லை மாவட்ட இந்தி பிரசாரக் சமிதி தலைவர் ராஜகோபால் தெரிவித்தார்.

Related Stories: