×

தீபத்திருவிழாவிற்கு ₹2 லட்சம் மதிப்பில் தீபக்கொப்பரை திருவண்ணாமலையில் தயாரானது திருநெல்வேலி அருகே அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை, நவ.16: திருநெல்வேலி அருகே அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவிற்கு, ₹2 லட்சம் மதிப்பில் தீபக்கொப்பரை திருவண்ணாமலையில் தயார் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் 10ம் நாள் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அடுத்த சாமியார் பொத்தரை கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலிலும் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அங்குள்ள மலையில் மகாதீபம் ஏற்றுவதற்கு, தீபக்கொப்பரையை செய்து கொடுக்கும்படி, திருவண்ணாமலையில் சூர்யா நகரை சேர்ந்த கலைஞர் மணிகண்டன் என்பவரை கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ₹2 லட்சம் மதிப்பில் நான்கே முக்கால் அடி உயரத்தில் செம்பு உலோகத்தால், 120 கிலோ எடையில் தீபக்கொப்பரை புதியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தீபக்கொப்பரை நேற்று திருவண்ணாமலை மாடவீதி வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. விரைவில், சாமியார் பொத்தரை அண்ணாமலையார் கோயிலுக்கு விரைவில் தீபக்கொப்பரையானது அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags : Tiruppannaparai ,Tiruvannamalai ,Tiruvaturavilayam ,temple ,Tirunelveli Annamalaiyar ,Tirunelveli ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...