திருச்சி, நவ.16: திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் விற்பனை தொகையை கடைகளிலேயே பெற்றுச்செல்ல வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் டாஸ்மாக் பணியாளர்களை தாக்கி, ரூ.1.77 லட்சத்தை சமீபத்தில் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சோமரசம்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், டாஸ்மாக் மேலாளர் பணத்தை கட்டும்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது.