பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 16: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை துணை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 2 ஆண்டுகள் பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவோருக்கும் மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: