இடைப்பாடி அருகே வயிற்றுப்போக்கால் 9 மாத குழந்தை பலி அரசு மருத்துவமனையில் பதற்றம்

இடைப்பாடி, நவ.16:   இடைப்பாடி அடுத்த வெள்ளாளபுரம் எல்லனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமார்(23). இவர் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் 2 ஆண்டுக்கு முன் மைடீஸ்(20) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது 9 மாத குழந்தையான கிருத்திக்கிற்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், குணமாகாமல் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நேற்று இரவு, குழந்தையை இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகவல் கிராமத்தில் பரவியதால், செந்தில்குமாரின் உறவினர்கள், இடைப்பாடி அரசு மருத்துவனையில் குவிந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த இடைப்பாடி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Related Stories: