விவசாயி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

வானூர், நவ. 16: வானூர் தாலுகா கிளியனூர் அருகே உள்ள குதிரைப்பொன்னிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(56), விவசாயி. சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் முன்பக்க கதவை சிறிது திறந்து வைத்துவிட்டு இருந்துள்ளனர். நள்ளிரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த கொள்ளையன் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். காலையில் வழக்கம்போல் எழுந்து சண்முகம் பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கிளியனூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Related Stories: