விழுப்புரம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

விழுப்புரம், நவ. 16: கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம்-திருவண்ணாமலைக்கு வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12 மணியளவில் சென்றடையும். அதே போல் இரவு 10 மணிக்கு புறப்பட்டு 11.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். அதே போல் திருவண்ணாமலையில் இருந்து 22, 23ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மாலை 2.45 மணியளவில் விழுப்புரத்தை வந்தடையும்.

அதே போல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்தை 5.55 மணிக்கு வந்தடையும். திருவண்ணாமலையில் இருந்து 24ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பல்லம், தண்டரை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: