புதுச்சேரி, நவ. 16: புதுவையில் கஞ்சா விற்றுத்தர மறுத்த வாலிபரை செல்போனில் படம்பிடித்து மிரட்டிய திருவண்ணாமலை ஆசாமியை கோரிமேடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. புதுவை, குண்டுபாளையத்தைச் சேர்ந்தவர் விக்கி என்ற ராஜா விக்னேஷ் (24). பெயிண்டரான இவரை தட்டாஞ்சாவடி பெட்டிக்கடையில் ஏற்பட்ட திடீர் பழக்கத்தை பயன்படுத்தி திருவண்ணாமலையைச் சேர்ந்த பவன்குமார் என்ற பிரவீன்குமார் சிலதினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றுத் தருமாறு மிரட்டினார்.