வாலிபரை மிரட்டிய தி.மலை ஆசாமி கைது

புதுச்சேரி, நவ. 16: புதுவையில் கஞ்சா விற்றுத்தர மறுத்த வாலிபரை செல்போனில் படம்பிடித்து மிரட்டிய திருவண்ணாமலை ஆசாமியை கோரிமேடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. புதுவை, குண்டுபாளையத்தைச் சேர்ந்தவர் விக்கி என்ற ராஜா விக்னேஷ் (24). பெயிண்டரான இவரை தட்டாஞ்சாவடி பெட்டிக்கடையில் ஏற்பட்ட திடீர் பழக்கத்தை பயன்படுத்தி திருவண்ணாமலையைச் சேர்ந்த பவன்குமார் என்ற பிரவீன்குமார் சிலதினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றுத் தருமாறு மிரட்டினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பவன்குமார் மீது வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார், பவன் குமாரை நள்ளிரவு கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரிடம் தொடர்பு வைத்திருந்த கஞ்சா கும்பல் பற்றிய தகவல்களையும் சேகரித்தனர். பின்னர் மாலையில் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: