போக்குவரத்து விதிமீறல் ரூ.1 லட்சம் அபராதம் 6 வாகனங்கள் பறிமுதல்

மதுரை, நவ. 16: மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிடும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 705 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  அதிவேகம், அதிக சுமை, சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 115 வாகனங் களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.96.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வாகன சான்று இல்லாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கல்யாணகுமார்(மத்தியம்), கருப்புசாமி(வடக்கு), சுரேஷ்(தெற்கு), போக்குவரத்து உதவி கமிஷனர் ேஜாசப் நிக்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: