மதுரை, நவ. 16: மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்மநபர், ‘இன்னும் சிறிது நேரத்தில் மதுரை ரயில் நிலையம், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’ என கூறிவிட்டு போனை “கட்” செய்து விட்டார். இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.