திருப்பூர், நவ.16: திருப்பூர் மாவட்டத்தில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக உதிரிப்பாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதில், பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக, பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்காக, நடப்பாண்டு படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லூதியானாவில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்திடம் இருந்து சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்றன.