திருப்பூர், நவ.16:திருப்பூர் அருள்புரம், சந்தை பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (17 ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், கிருஷ்ணாபுரம், சிட்கோ. சந்தைபேட்டை, அரண்மனைபுதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதுார், கரட்டங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு,புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை.