உடுமலை, நவ.16: உடுமலை உழவர்சந்தை அருகே உள்ள கிளை நூலகம் எண் 2ல், 51வது தேசிய நூலக வார விழா தொடக்க விழா நடந்தது. இரண்டாம் நிலை நூலகர் கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றினார். உடுமலை அரசு கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன், நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முடிவில் நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.