×

தேசிய நூலக வார விழா துவக்கம்

உடுமலை, நவ.16: உடுமலை உழவர்சந்தை அருகே உள்ள கிளை நூலகம் எண் 2ல், 51வது தேசிய நூலக வார விழா தொடக்க விழா நடந்தது. இரண்டாம் நிலை நூலகர் கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றினார். உடுமலை அரசு கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன், நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முடிவில் நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.

வரும் 21ம்தேதி வரை நடைபெறும் நூலக வார விழாவில், வரும் ஞாயிற்றுக்கிழமை மாணவ மாணவியருக்கு தாலுகா அளவிலான ஓவிய போட்டி, 20ம்தேதி அறிவியல் கண்காட்சி, 21ம்தேதி புத்தக கண்காட்சியும், உடுமலை வட்டார பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி மற்றம் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Tags : National Library ,festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!