×

ஊட்டியில் நாளை மின் தடை

ஊட்டி, நவ. 16: ஊட்டி துணை மின் நிலைமின் நிலையத்தில் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்வதால், நாளை 17ம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அன்றைய தினம் ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலார் மற்றும் எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் முபாரக் கூறியுள்ளார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...