×

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை,நவ.16: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநகர கிளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். அதில் அலுவலர் குழு பரிந்துரைகள் மீதான பணப்பலன்களை வழங்க வேண்டும், 21 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், மாதம் தோறும் மருத்துவபடி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்,நிர்வாக தீர்ப்பாயம் அமைத்தல், ஓய்வூதியதாரர்களுக்கு அரசு பேருந்துகளில் 50 சதவிதம் பயணசலுகை வழங்குதல், ஈமசடங்கு நிதியாக ரு.25 ஆயிரம் வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும், உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags : Retired Officers Association ,
× RELATED வைத்தீஸ்வரன்கோவிலில் ரயில்...