மணப்பாறை காவல்நிலைய வா சலில் பீர்பாட்டிலை உடைத்து ரகளை செய்த வாலிபர் கைது

மணப்பாறை, நவ.15:  புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணப்பாறை காவல் நிலைய வாசலில்  பீர் பாட்டிலை உடைத்து ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவ ட்டம் மணப்பாறை முத்தன் தெருவை சேர்ந்தவர் மனோகர். இவர் நேற்றிரவு மணப்பாறை காவல்நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டு காவல் நிலைய வாசல் படிகளில் பீர் பாட்டிலை போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதில், பாட்டில் நொறுங்கி தூள், தூளானது. இது சம்பந்தமாக ஏட்டு கல்பனா கொடுத்த புகாரையடுத்து மனோகரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலைய வாசலில் வாலிபர் பீர் பாட்டிலை போட்டு உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: